Mnadu News

டிச.5-ல் வங்கக்கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு.

சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட தகவலில்,கேரள கடலோர பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக,தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். டிசம்பர் மாதம் 5-ஆம் தேதி வங்கக்கடலில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது படிப்படியாக வலுப்பெற்று புயலாக மாற வாய்ப்புள்ளது. கிழக்கு திசை காற்றின் மாறுபாட்டால் தமிழகத்தில் இன்று முதல் 5 நாள்களுக்கு மிதமான மழை தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எ;னறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Share this post with your friends