Mnadu News

டெல்லியில் அதிரடி சோதனை: ஆயுத சட்டத்தின் கீழ் 26 பேர் கைது.

வெளிநாடுகளில் இருந்து கொண்டு, இந்தியாவில் உள்ள சிலரை தங்களது கட்டுக்குள் வைத்து, வேலைக்கு அமர்த்தி சட்டவிரோத செயல்களில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர் என உளவு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், இந்தியாவில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கும்பலை சேர்ந்தவர்களின் வீடு உள்ளிட்ட இடங்களில் டெல்லி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த் சோதனையில், துப்பாக்கி குண்டு துளைக்காத கார் ஒன்று,3 கைத்துப்பாக்கிகள்,7 சுற்றுகள் கொண்ட தோட்டாக்கள், போதை பொருட்களான் ஹெராயின், 73 கிராம் ஆம்பிடமைன் மற்றும் 20 லட்சம் ரூபாய் பணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, ஆயுத சட்டம் மற்றும் போதை பொருள் ஒழிப்பு சட்டம் ஆகியவற்றின் கீழ் பல்வேறு குற்றங்களுக்காக போலீசார் 20 பேரை பிடித்தும், 6 பேரை கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்

Share this post with your friends

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுகிறார் சச்சின் பைலட்: ஜூன் 11ஆம் தேதி புதிய கட்சி அறிவிப்பு வெளியிட வாய்ப்பு.

கடந்த 2018-ஆம் ஆண்டு ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் கைப்பற்றிய முதல் நாளில்...

Read More