ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக நேற்று மாலை திருப்பதி மலைக்கு வந்த ஓபிஎஸ் திருப்பதி மலையில் உள்ள விஐபி கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் இரவு தங்கி இன்று காலை கோவிலுக்கு சென்று ஏழுமலையானை வழிபட்டார். சாமி கும்பிட்ட பின் அவருக்கு கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தேவஸ்தான அதிகாரிகள் தீர்த்த பிரசாதங்களை வழங்கினர். தொடர்ந்து தேவஸ்தான வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர். முன்னதாக திருப்பதி மலையில் உள்ள வராகசாமி கோவில்,ஹயக்கிரீவர் கோவில் ஆகிய கோவில்களில் அவர் சாமி கும்பிட்டார்.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More