Mnadu News

திரிபுரா தேர் விபத்து: மாவட்ட நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த முதல் அமைச்சர் மாணிக் சாஹா உத்தரவு.

திரிபுரா மாநிலம் உனகோட்டி மாவட்டத்தில் உள்ள குமார்காட் கிராம ஜெகந்நாதர் கோயிலில் கடந்த 10 நாட்களாக தேர்த் திருவிழா நடைபெற்று வந்தது. இந்நிலையில் தேர் நிலைக்குத் திரும்பும் விழா நடைபெற்றது. தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து வந்த போது மேல்பகுதியில் உயர் அழுத்த மின் கம்பியில் உரசியது. இதில் தேரை வடம்பிடித்து இழுத்த மூன்று குழந்தைகள், 3 பெண்கள் உள்ளிட்ட 7 பேர் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அத்துடன்; 16 பேர் காயமடைந்தனர்.இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசியுள்ள அம் மாநில முதல் அமைச்சர் மாணிக் சாஹா,இந்த விபத்து குறித்து உனாகோட்டி மாவட்ட நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விசாரணை அறிக்கை கிடைத்ததும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More