வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சியில் இருந்தது. கடந்த 2018-ஆம் ஆண்டு பேரவைத் தேர்தலின்போது அங்கு பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இதன் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் வெற்றி முடிவுக்கு வந்தது. திரிபுராவில் 60 பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் கடந்த முறை பாஜக 36 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. ஆளும் கட்சியாக இருந்து தேர்தலைச் சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 16 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி வரிசைக்கு சென்றது. ஆனால், காங்கிரஸால் ஓரிடத்தில் கூட வெல்ல முடியவில்லை. 2013-ஆம் ஆண்டு திரிபுரா தேர்தலில் ஓரிடத்தில் கூட வெற்றி பெறாத பாஜக, 2018 தேர்தலில் 36 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. இப்போது ஆளும் கட்சி என்ற நிலையில் இருந்து தேர்தலைச் சந்திக்கிறது. இந்நிலையில், அந்த மாநிலத்தில் பாஜகவைத் தோற்கடிக்கும் நோக்கில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – காங்கிரஸ் கைகோத்துள்ளன. இக்கூட்டணியில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி இணையுமா என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் திரிபுரா மாநில பேரவைத் தேர்தலையொட்டி 45 பேர் அடங்கிய முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக இன்று வெளியிட்டுள்ளது.
இதனை பாஜக தலைவர்களான அனில் பலலூனி, பாஜக தலைவர் சம்பித் பத்ரா ஆகியோர் டெல்லியில் உள்ள கட்சித் தலைமையகத்தில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் இன்று வெளியிட்டனர். அதில், முதன்முறையாக 11 பெண் வேட்பாளர்களுக்கு சீட்டு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சர் பிரதிமா பௌமிக் தன்பூர் தொகுதியிலும், மாநிலத் தலைவர் ராஜீவ் பட்டாச்சார்யா பிப்லப் தேவ் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.அதேசமயம் தற்போதைய எம்எல்ஏக்கள் 6 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நாங்குனேரி- மேட்டுப்பாளையம் வழித்தடம்: 24-ல் ரயில் வேக சோதனை.
நாங்குனேரி- மேட்டுப்பாளையம் இடையே இரட்டைப் பாதையில் வரும் 24-ஆம் தேதி தெற்கு ரயில்வே...
Read More