Mnadu News

திருமலையில் தங்கும் அறைகள் ஒதுக்கீடு செய்வதில் புதிய நடைமுறை அமல்.

திருப்பதி திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு அறைகள் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடுகளை தடுக்க,தங்கும் அறைக்கான ரசீதை வாங்குவோரின் முகம் வெப்கேமராவில் படம் பிடிக்கப்படுகிறது.ஏழுமலையானை தரிசித்த பின்பு அவர்கள் அறைகளை காலி செய்யும் போது, வேப்கேமராவில் பதிவான அதே நபர் இருந்தால் மட்டுமே முன்பணம் திரும்ப கொடுக்கப்படும். வேறொரு நபர் அறையை காலி செய்வதாக கூறினால், முன்பணம் திரும்ப கொடுக்கப்படாது. இதனால், தரகர்களை நம்பி பணம் செலவழிப்பது தவிர்க்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Share this post with your friends

இந்தியாவுக்கேவழிகாட்டியாகஅமைந்ததுவைக்கம் போராட்டம்:முதல்அமைச்சர் எழுச்சி உரை.

இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்தது வைக்கம் போராட்டம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி உள்ளார்....

Read More

கர்ப்பிணிகள்வடகொரியாவில்தூக்கிலிடப்படுகிறார் கள்:தென்கொரியா குற்றச்சாட்டு.

தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,ஆறு மாத கர்ப்பிணி பெண்ணை வட...

Read More