திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில், நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகையால் வரிசையில் தள்ளுமுள்ளு ஏற்படுவது வழக்கம். ஒரு மணிநேரத்தில் 5 ஆயிரத்து 500 பேர் என்ற அடிப்படையில், 80 ஆயிரம் பக்தர்கள் தினமும் வழிபட்டுச் செல்கின்றனர். இந்த நிலையில், கோவிலுக்குள் உள்ள வெள்ளிவாசலில் இருந்து ஒரே வரிசையாக பக்தர்களை கருவறைக்கு அனுப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, ஒரு மணி நேரத்தில் 6 ஆயிரத்து 250-க்கும் மேற்பட்ட பக்தர்கள் என, ஒரே நாளில் 92 ஆயிரத்து 238 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனிடையே, ஒரேநாளில் 4 கோடியே 2 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை பெறப்பட்டுள்ளது.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More