Mnadu News

திருமலையில் புதிய முயற்சி: ஒரே நாளில் 92 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம்.

திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில், நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகையால் வரிசையில் தள்ளுமுள்ளு ஏற்படுவது வழக்கம். ஒரு மணிநேரத்தில் 5 ஆயிரத்து 500 பேர் என்ற அடிப்படையில், 80 ஆயிரம் பக்தர்கள் தினமும் வழிபட்டுச் செல்கின்றனர். இந்த நிலையில், கோவிலுக்குள் உள்ள வெள்ளிவாசலில் இருந்து ஒரே வரிசையாக பக்தர்களை கருவறைக்கு அனுப்ப முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன்படி, ஒரு மணி நேரத்தில் 6 ஆயிரத்து 250-க்கும் மேற்பட்ட பக்தர்கள் என, ஒரே நாளில் 92 ஆயிரத்து 238 பக்தர்கள் தரிசனம் செய்தனர். இதனிடையே, ஒரேநாளில் 4 கோடியே 2 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கை பெறப்பட்டுள்ளது.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More