Mnadu News

தென் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்.

தென் மாவட்டங்களில் நாளை, நாளை மறுநாள் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். ஒரு சில இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 முதல் 4 டிகிரி செல்சியஸ் குறைவாக இருக்கக்கூடும் என வானிலை மையம் அறிவித்தது.

Share this post with your friends