Mnadu News

தேசிய கீதம் அவமதிப்பு புகார் வழக்கு: மம்தாவை விடுவிக்க மும்பை உயர்நீதிமன்றம் மறுப்பு.

மேற்கு வங்காள முதல்-அமைச்சர் மம்தா பானர்ஜி கடந்த 2021-ஆம் ஆண்டு மராட்டியத்தின் மும்பை நகரில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் மும்பையில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேசினார்.இதையடுத்து நடந்த நிகழ்ச்சி ஒன்றில் தேசிய கீதம் இசைக்கும்போது, அவர் முதலில் அமர்ந்து இருந்தும், அதன்பின் எழுந்து சென்று தேசிய கீதம் முழுமையாக இசைக்கப்படுவதற்கு முன் அதனை பாதியிலேயே நிறுத்தும்படி கூறி சென்றுவிட்டார்.இது குறித்து, மும்பை பா.ஜ.க. செயலாளர் விவேகானந்த் குப்தா, மும்பை போலீசில் புகார் அளித்து உள்ளார். இந்த புகாரை ரத்து செய்யும்படி மும்பை உயர்நீதிமன்றத்தில்; மம்தா பானர்ஜி சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை நீதிபதி அமித் போர்கார் தலைமையிலான ஒரு நபர் அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளது. இதனால், மம்தா பானர்ஜிக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.

Share this post with your friends

மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு:முதன்மைச் செயலாளர் ஆனார் துரை வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

Read More

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்.

பீகாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே...

Read More