Mnadu News

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக குஷ்பு பொறுப்பேற்றார்.

நடிகை குஷ்பு கடந்த 2010-ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார். 2014-இல் அக்கட்சியிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். பின்னர், காங்கிரஸிலிருந்தும் விலகி பாஜகவில் இணைந்தார்.2021 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர், அவருக்கு பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. தற்போது தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்நிலையில் டெல்லியில் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக குஷ்பு பொறுப்பேற்றுக்கொண்டார். பொறுப்பேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘பெண்களுக்கு எதிரான கொடுமைகள் அனைத்து இடங்களிலும் நடக்கின்றன. தற்போது அதிகமாக இருக்கின்றன. பெண்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுக்க என்னால் என்ன செய்ய முடியுமோ கண்டிப்பாக செய்வேன். தமிழ்நாட்டில் இருந்து வந்திருப்பதால் தமிழ்நாட்டுப் பெண்களின் பிரச்னைகளில் கூடுதல் கவனம் செலுத்துவேன்’ என்று கூறியுள்ளார்.

Share this post with your friends

4 நீதிபதிகளை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரை: கொலீஜியம் நடவடிக்கை.

தமிழக மாவட்ட நீதிபதிகளான ஆர்.சக்திவேல், பி.தனபால், சின்னசாமி குமரப்பன், கே.ராஜசேகர் ஆகியோரை உயர்நீதிமன்ற...

Read More

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல்பொதுக்குழு வழக்கு: உயர்நீதிமன்றத்தில் வாதங்கள் நிறைவு.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரியும், பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ.பன்னீர்செல்வம்...

Read More