Mnadu News

தொங்கு பாலம் விபத்து: வரும் 14-இல் உச்சநீதிமன்றம் விசாரணை.

குஜராத்தில் ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டிருந்த நூறாண்டு பழைமைவாய்ந்த தொங்கு பாலம் அறுந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட விபத்தில் 141 பேர் உயிரிழந்தனர்
இந்த பாலத்தில் புனரமைப்புப் பணிகளை தனியார் நிறுவனம் மேற்கொண்டு வந்த நிலையில், அரசிடம் அனுமதி பெறாமல் திட்டமிடப்பட்டதற்கு முன்பே பாலம் திறக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டில் தனியார் நிறுவனத்தை சேர்ந்த 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், விபத்து குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும், நாட்டில் உள்ள பழமை வாய்ந்த பாலங்களை தணிக்கை செய்யக் கோரியும் வழக்கறிஞர் விஷால் திவாரி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், வழக்கின் விசாரணை வரும் 14 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More