Mnadu News

நல்லிணக்க அடிப்படையில் 600 இந்திய மீனவர்களை விடுவிக்க பாக் முடிவு.

இந்திய அழைப்பை ஏற்று, கோவாவில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பு நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மாநாட்டில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி பங்கேற்றுள்ளார்.இதனிடையே பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ இந்திய வருகை எதிரொலியாக, நல்லிணக்க நடவடிக்கையாக அந்நாட்டு சிறைகளில் உள்ள 600 இந்திய மீனவர்களை விடுவிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, வரும் 12ஆம் தேதி முதற்கட்டமாக 200 மீனவர்களும், 14ஆம் தேதிக்குள் மற்ற அனைவரும் விடுவிக்கப்படுவார்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

Share this post with your friends

மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு:முதன்மைச் செயலாளர் ஆனார் துரை வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

Read More

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்.

பீகாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே...

Read More