கடந்த மே 28ஆம் தேதி;, புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்பு விழா கோலாகலமாக நடைபெற்றது. இதை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்ததோடு, அவைத்தலைவர் இருக்கை அருகே செங்கோலையும் நிறுவினார். இந்நிலையில், மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை மாதம் 17ஆம் தேதி அல்லது ஜூலை 21ஆம் தேதி துவக்கலாம் என, இரண்டு தேதிகள் உத்தேசமாக இறுதி செய்யப்பட்டுள்ளன.இதனிடையே மழைக்கால கூட்டத்தொடரில் மணிப்பூர் கலவரம், விலைவாசி உயர்வு, பொது சிவில் சட்டம் உள்ளிட்ட பிரச்னைகளை கேள்வி எழுப்ப, எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. இதனால் கூட்டத்தொடரில் விவாதங்கள் அனல்பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More