Mnadu News

பனிப்பொழிவில் மறைந்த தஞ்சை பெரிய கோயில்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக விட்டுவிட்டு கனமழை பெய்து வந்த நிலையில், இன்று அதிகாலை முதல் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகனங்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.
இந்தக் கடுமையான பனிப்பொழிவால் உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் முற்றிலும் மறைந்துள்ளது.
தற்போது சபரிமலை சீசன் என்பதால், தஞ்சைக்கு ஏராளமான ஐயப்ப பக்தர்கள் சுற்றுலாவுக்கு வந்த நிலையில், பனி மூட்டத்தால், பெரிய கோயிலின் அழகை ரசிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More