Mnadu News

பழிக்குப்பழி நடவடிக்கை: இந்திய பத்திரிக்கையாளரை நாட்டை விட்டு வெளியேற உத்தரவிட்ட சீனா.

கல்வான் மோதலுக்கு பின் இந்தியா – சீனா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் தூதரக ரீதியிலும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு கடந்த மே மாதம் இந்தியாவில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் பங்கேற்ற நிலையில் சீன பத்திரிக்கையாளர்கள் 2 பேருக்கு இந்தியா தற்காலிக விசா வழங்கியது. அதன் பின்னர் விசா புதுப்பிக்கப்படவில்லை. விசா புதுப்பிக்காமல் சீன பத்திரிக்கையாளர்களுக்கு இந்தியா அனுமதி மறுத்ததற்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது. அதன்படி, பிடிஐ செய்தி முகமையின் பத்திரிக்கையாளர் ஒருவர் மட்டுமே சீனாவில் தற்போது உள்ள நிலையில் அவரை இந்த மாதத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறும்படி சீனா உத்தரவிட்டுள்ளது.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More