Mnadu News

பாகிஸ்தானில் இரு தரப்பினருக்கிடையே மோதல்: 16 பேர் உயிரிழப்பு.

பாகிஸ்தானின் பெஷாரில் இருந்து தென்மேற்கே 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தர்ரா ஆடம் கெகாவில், நிலக்கரி சுரங்கப்பாதை எல்லை நிர்ணயம் செய்வதில் சன்னி கேல் மற்றும் ஜர்குன் கேல் என்ற இரு சமூகத்தினருக்கு இடையே சண்டை ஏற்பட்டது.இதில் இருதரப்பினர் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், மோதலை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த வன்முறையில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெஷாவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இந்த சம்பவம் தொடர்பாக தர்ரா ஆதம் கேல் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Share this post with your friends