பஞ்சாபில் இந்திய – பாகிஸ்தான் சர்வதேச எல்லைப்பகுதியில் நுழைந்த மற்றொரு பாகிஸ்தான் ட்ரோனை எல்லைப் பாதுகாப்புப்படையினர் சுட்டு வீழ்த்தியுள்ளனர்.இந்த ட்ரோன் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள ஷைத்பூர் கலான் கிராமத்தின் புறநகரில் மீட்கப்பட்டது.அதேபோல்,பஞ்சாபின் டர்ன்-தரண் மாவட்டத்தில் உள்ள ராஜோக் கிராமத்தின் புறநகரில் எல்லைப் பாதுகாப்புப்படையால் சுட்டு வீழ்த்தப்பட்ட மற்றொரு ட்ரோன்,ராஜோகே கிராமத்தை ஒட்டியுள்ள விவசாய வயலில் இருந்து பஞ்சாப் காவல்துறை உதவியுடன் மீட்கப்பட்டது.இதையடுத்து, சர்வதேச எல்லையில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More