Mnadu News

பாஜகவின் வெற்றி தமிழக மக்களின் தீர்ப்பு அல்ல என்பதில் மகிழ்ச்சி : கமல்ஹாசன்

மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு கமல்ஹாசன் நன்றி தெரிவித்தார். சென்னை ஆழ்வார்பேட்டையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக மக்களுக்கு தொடர்ந்து செயலாற்றுவோம் என்று கூறினார். எதிர்பார்த்ததை விட மக்கள் தங்களுக்கு அதிகம் வாக்களித்துள்ளதாக கூறிய அவர், நேர் வழியில் சென்றால் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை மக்கள் மநீம கட்சிக்கு கொடுத்துள்ளதாக கமல்ஹாசன் மகிழ்ச்சி தெரிவித்தார்.மேலும் பாஜகவின் வெற்றி தமிழக மக்களின் தீர்ப்பு அல்ல என்பதில் தாம் மகிழ்ச்சி அடைந்துள்ளதாக கமல் கூறினார்.

Share this post with your friends