2021ஆம் ஆண்டுக்கான காந்தி அமைதி விருது உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரிலுள்ள கீதா பத்திரிகைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த விருதைப் பெறுவதன் மூலம் ஒரு கோடி ரூபாய் ரொக்கப் பரிசாக வழங்கப்படும். மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.ஹிந்து மதவாத கொள்கைகளைப் பரப்பும் கீதா பத்திரிகைக்கு காந்தி அமைதி விருது அறிவித்ததற்கு, ராஷ்டீரிய ஜனதா தள கட்சியின் எம்பி மனோஜ் குமார் ஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.பாஜக அடிப்படையிலேயே காந்தியத்துக்கு எதிரானது. அத்தகைய அரசிடமிருந்து வேறு எதை எதிர்பார்க்க முடியும். கீதா பத்திரிகைக்கு அறிவிக்கப்பட்டுள்ள காந்தி விருது, சாவர்க்கர் மற்றும் கோட்சேவுக்கு வழங்கப்படுவதைப் போன்றது எனக் குறிப்பிட்டுள்ளார்.

கடற்கரையில் ஒதுங்கிய மீன்கள்; ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!
ஜப்பான் நாட்டின் ஹகொடட்டே கடற்கரையில் ஆயிரக்கணக்கான டன் கணக்கில் மத்தி மீன்கள் இறந்து...
Read More