Mnadu News

பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்கள: 3-ஆம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்.

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வுமண்டலம் மேற்கு-தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரை பகுதிகளை இன்று காலை முதல் கடக்க கூடும். இதனால், இலங்கை மற்றும் தமிழக கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சுமார் 55 கி.மீட்டர் வேகத்தில் புயல்காற்று வீசக்கூடும். மேலும் தூத்துக்குடி உள்ளிட்ட தென் கடலோர மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையிலும், தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வரும் கப்பல்களுக்கு தெரியப்படுத்தும் வகையிலும், வஉசி துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு இன்று ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல், பாம்பன் துறைமுகத்திலும் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு இன்று காலை ஏற்றப்பட்டது.

Share this post with your friends

இந்தியாவுக்கேவழிகாட்டியாகஅமைந்ததுவைக்கம் போராட்டம்:முதல்அமைச்சர் எழுச்சி உரை.

இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்தது வைக்கம் போராட்டம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி உள்ளார்....

Read More

கர்ப்பிணிகள்வடகொரியாவில்தூக்கிலிடப்படுகிறார் கள்:தென்கொரியா குற்றச்சாட்டு.

தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,ஆறு மாத கர்ப்பிணி பெண்ணை வட...

Read More