பிபர்ஜாய் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத்தின் கடலோர மாவட்டங்களில் வசித்துவந்த 8,ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.அதோடு, மத்திய அரசு, மாநில அரசு, இந்திய விமானப்படை, கடற்படை, கடலோர காவல்படை மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் சேர்ந்து ‘பிபர்ஜாய்’ புயலின் தாக்கததால் ஏற்படும் விளைவுகளை குறைக்க முயற்சி செய்து வருவதாகவும் 2 லட்சம் சிறிய மற்றும் பெரிய விலங்குகள் கூட பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளதாகவும் தெரிவித்தார்.அதையடுத்து குஜராத்தில் ஜக்கவு துறைமுகப் பகுதியில் தயார் நிலையில் இருக்கும் புஜ் ராணுவ தளத்தையும் பார்வையிட்ட அமைச்சர், குஜராத் அதிகாரிகளுடனும் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தின் 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்று...
Read More