Mnadu News

பிபர்ஜாய் புயல்: பாகிஸ்தானில் ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம்.

கிழக்கு மத்திய அரபிக்கடலில் உருவான பிபர்ஜாய் புயல், குஜராத்தின் மாண்டவி நகருக்கும் பாகிஸ்தானின் கராச்சி நகருக்கும் இடைப்பட்ட பகுதியில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.புயல் கரையைக் கடக்கும்போது பாகிஸ்தானின் பல மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதோடு, காற்றின் வேகம் மணிக்கு 140 முதல் 150 கிலோ மீட்டர் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதால் தட்டா, பாடின், சஜாவால், தர்பர்கர், கராச்சி, மிர்புர்காஸ், உமர்கோட், ஹைதராபாத், ஓர்மாரா, டான்டோ அல்லாஹியார் ஆகிய பகுதிகளில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். முகாம்களில் உள்ளோருக்கு சுத்தமான குடிநீர் மற்றும் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More