Mnadu News

பிபர்ஜாய் புயல்: மாண்ட்வி கிராம மக்களுக்கு உணவு பாக்கெட்டுகள் விநியோகம்.

பிபர்ஜாய் புயல் குஜராத் மாநிலத்தின் கட்ச் வளைகுடா பகுதியில் கரையைக் கடக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும்போது குஜராத் மாநிலத்தின் பல மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மாண்ட்வி பகுதியை சுற்றி மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு பல்வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில், மாண்ட்வியில் உள்ள சுவாமிநாராயண் கோவிலில் சுமார் 5 ஆயிரம் உணவுப் பொட்டலங்கள் தயார் செய்பட்டுள்ளது. இந்த உணவு பாக்கெட்டுகள் மாண்ட்வி அருகிலுள்ள கிராமங்களில் விநியோகிக்கப்பட்டது.

Share this post with your friends