Mnadu News

பிபோர்ஜோய் புயல் எதிரொலி: குஜராத்தில் 50 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்.

அதி தீவிர புயலாக மாறியுள்ள இந்த பிபோர்ஜோய் சவுராஷ்டிரா – கட்ச் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்நிலையில், பிபோர்ஜோய் புயல் பாதிப்புகளை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத்தின் கடற்கரை பகுதிகளில் இருந்து சுமார் 50 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share this post with your friends