பிரேசிலின் தெற்கு மாநிலமான ரியோ கிராண்டே டோ சுலில் நேற்று முன்தினம் கடுமையான வெப்பமண்டல சூறாவளி தாக்கியதில், 11 பேர் உயிரிழந்த நிலையில், 25 பேர் மாயமாகி உள்ளனர். புயலை தொடர்ந்து கணமழையும் வெளுத்து வாங்கியதால் காணாமல் போன 25 பேரை கண்டுபிடிக்க வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் பணி தீவிரம் எடுத்துள்ளது.

8,000 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் காரா நகரம் சூறாவளியால் மோசமான பாதிப்புகளை சந்தித்துள்ளது. புயல் காரணமாக சிக்கி உள்ள 2,400 பேரைகடந்த இரண்டு நாட்களில் அதிகாரிகள் மீட்டுள்ளனர். இந்த நாட்டின் ஆளுநர் கூறுகையில் “மனித உயிர்களைப் பாதுகாப்பதுதான் எங்களின் முக்கிய நோக்கமாகும். சிக்கித் தவிக்கும் மக்களை மீட்டு, காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து, குடும்பங்களுக்கு அனைத்து ஆதரவையும் அளித்து வருகிறோம்.

கடும் பாதிப்புகளை சந்தித்து உள்ள இடங்களில் உள்ள மக்களை விளையாட்டு மைதானங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். மேலும், மண் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் மீட்புப் பணிகள் தீவிரம் ஆக்கப்பட்டு உள்ளன.
