துணை முதல் அமைச்சர் பதவியில் இருந்து மணீஷ் சிசோடியா, நேற்று ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை முதல் அமைச்சர்; அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்றுக் கொண்டார்.அதோடு, கெஜ்ரிவால் அமைச்சரவையில் அங்கம் வகித்து வரும் சத்யேந்திர ஜெயின் பணப் பரிமாற்ற மோசடி வழக்கில், கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார். இவர் பொறுப்பு வகித்து வந்த இலாகாக்கள், மணீஷ் சிசோடியாவுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டன. சத்யேந்திர ஜெயின் இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்தார்.இந்நிலையில், டில்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சத்தியேந்திர ஜெயினும், தன் அமைச்சர் பதவியை நேற்று ராஜினாமா செய்தார். இதையடுத்து, மணீஷ் சிசோடியா பொறுப்பு வகித்து வந்த இலாகாக்கள், ஆம் ஆத்மியை சேர்ந்த வருவாய் துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் ராஜ்குமார் ஆனந்த் ஆகியோரிடம் கூடுதல் பொறுப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏக்கள் சவுரப் பரத்வாஜ், அதிஷி ஆகியோரை புதிய அமைச்சர்களாக நியமிக்க, டெல்லி முதல் அமைச்சர்; அரவிந்த் கெஜ்ரிவால் ஆளுநருக்கு இன்று(மார்ச் 1 ) பரிந்துரை செய்துள்ளார்.

“எனது இமேஜை கெடுக்க சிலர் தொடர்ந்து முயல்கின்றனர்”: பிரதமர் மோடி குற்றச்சாட்டு.
புதுடெல்லி – போபால் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர...
Read More