Mnadu News

புதுச்சேரியில் அரிசி-சர்க்கரைக்கு பதில் பணம்: முதல் அமைச்சர் அறிவிப்பு.

தீபாவளி பண்டிகை வரும் 24 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுமக்கள் புது ஆடைகள், சீர் வரிசை பொருள்கள் வாங்குவதற்கு ஆர்வமுடன் கடைகளில் குவிந்து வருகின்றனர்.
பாப்ஸ்கோ நிறுவனம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி, பொங்கல் பண்டிகையையொட்டி, மக்களுக்கு சிறப்பு அங்காடியை திறந்து மளிகை பொருள்கள் மற்றும் பட்டாசுகள் சிறப்பு தள்ளுபடியுடன் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டும் மலிவு விலையில் சர்க்கரை, எண்ணெய் உள்ளிட்ட 25 பொருள்கள் கொண்ட தொகுப்பு 800- ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், புதுச்சேரியில் பாப்ஸ்கோ தீபாவளி சிறப்பங்காடியை முதல் அமைச்சர் ரங்கசாமி திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், தீபாவளி பண்டிகையையொட்டி, நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு வழங்கப்படும் 10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரைக்கு பதில் அதற்கு உண்டான பணம் அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்றார்.

Share this post with your friends