Mnadu News

புனேவில் அலங்காரப் பொருட்கள் கிடங்கில் தீ: 3 போ உடல் கருகி பலி.

மகாராஷ்ர மாநிலம் புனேவின் வாகோலி பகுதியில் ஒரு அலங்காரப் பொருட்கள் கிடங்கு உள்ளது. வழக்கம் போல கிடங்கை பூட்டி விட்டு பணியாளர்கள் சென்றுள்ளனர். இந்நிலையில் திடீர் என்று கிடங்கிலிருந்து புகை கிளம்பியது. அதையடுத்து, தீ மளமளவென கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. உடனடியாக,அக்கம் பக்கத்தில் வசிப்போர் தீயணைப்புத் துறைக்கு தகவல் தந்தனர். அதையடுத்து,சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கடும் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்து பிறகு முழுமையாக அணைத்தனர்.இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் பரிதாபமான உயிரிழந்தனர்.இந்த தீ விபத்து குறித்து போலீசார் வழக்கு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இத் தீயால் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான அலங்கார பொருட்கள் எரிந்து சாம்பலாகி உள்ளது.

Share this post with your friends