Mnadu News

புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை: ட்ரோன்கள் பறக்கத் தடை.

ஒடிசா மாநிலத் தலைநகரின் புவனேஸ்வரிலிருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்தில் புரி ஜெகந்நாதர் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு வருடந்தோறும் ஜெகந்நாதருக்கு கோலாகலமாக யாத்திரை நிகழ்த்தப்படுகிறது. அதன்படி, இந்தாண்டுக்கான ரத யாத்திரை ஜூன் 20-ஆம் தொடங்கவுள்ளது. பக்தர்களின் பாதுகாப்பு கருதி ரத யாத்திரை நடைபெறும் நாளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதித்து புரி போலீஸார் உத்தரவிட்டுள்ளனர். இந்த தடை உத்தரவு ஜூலை 1-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டப்பாட்டை மீறி ட்ரோன்கள் இயக்குபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More