Mnadu News

புழல், செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து இன்று மாலை நீர் திறப்பு.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை வட மாவட்டங்களில் தீவிரம் அடைந்துள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. தொடர்மழை காரணமாக சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல், செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஏரியின் பாதுகாப்பை கருதி திருவள்ளூர் மாவட்டம் புழல் நீர்த்தேக்கத்தில் இருந்து இன்று பிற்பகல் 3 மணிக்கு வினாடிக்கு 100 கன அடி உபரி நீர் திறக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஏரிக்கு நீர்வரத்து 2 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் உபரிநீர் கால்வாய் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதைபோல செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து பிற்பகல் 3 மணிக்கு 100 கனஅடி நீர் வெளியேற்றப்படும் என்று மாவட்ட கலெக்டர் ஆர்த்தி அறிவித்துள்ளார்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More