Mnadu News

பெங்களூருவில் 26 கிலோ மீட்டர் தூரம் திறந்த வேனில் பிரதமர் மோடி வாக்கு சேகரிப்பு.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில்,பெங்களூருவில் பிரதமர் மோடி 26 கிலோ மீட்டர் தூரம் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட, குண்டு துளைக்காத திறந்தவெளி வேனில் நின்றபடி சாலையின் இருபுறத்திலும் குவிந்திருந்த பா.ஜ.க தொண்டர்களை பார்த்து கை அசைத்தபடி பா.ஜ.க வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். அந்த கார் காவி நிறத்தில் இருந்தது. அதில் மோடியின் புகைப்படம் மற்றும் பா.ஜனதாவின் சின்னம் அச்சிடப்பட்டு இருந்தது. இந்த பேரணியின் போது மாணவ, மாணவிகள் கலை நிகழ்ச்சி மற்றும் கலாசார கலைஞர்களின் இசை நிகழ்ச்சி,நடைபெற்றது.அப்போது, ஹனுமன் போன்ற வேடங்களில் வந்து பேரணியில் பலர் பங்கேற்றனர்.

Share this post with your friends

மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு:முதன்மைச் செயலாளர் ஆனார் துரை வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

Read More

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்.

பீகாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே...

Read More