Mnadu News

பேரவையில் ஆளுநர் உரையை புறக்கணிக்க கேரள அரசு முடிவு?.

கேரள ஆளுநராக ஆரிஃப் முகமது கான் பொறுப்பேற்றத்தில் இருந்தே முதல் அமைச்சர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசுடன் மோதல் போக்கே நிலவு வருகின்றது. பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனத்தில் கேரள ஆளுநருக்கும் மாநில அரசுக்கும் இடையேயான மோதல் உச்சத்தை தொட்டது. மாநில அரசை நேரடியாக ஆளுநர் ஆரிஃப் கான் குற்றம்சாட்டி வருகிறார். இந்நிலையில், டிசம்பரில் தொடங்கிய கேரள சட்டப்பேரவை கூட்டத்தில், கேரள பல்கலைக்கழகங்களின் வேந்தர் பதவியிலிருந்து ஆளுநரை நீக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சட்டப்பேரவையின் 7-ஆவது கூட்டத்தொடர் தற்காலிகமாகவே ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஒரு சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிவடைந்த பிறகு மாநில ஆளுநரிடம் அமைச்சரவை ஒத்திவைக்கப்பட்டது தொடர்பாக தகவல்கள் தெரிவிக்க வேண்டும். ஆனால், கேரள அமைச்சரவை இதுவரை ஆளுநரிடன் எவ்வித தகவலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், கேரள சட்டப்பேரவையின் 7-வது அமர்வு புத்தாண்டு விடுமுறைக்கு பிறகு மீண்டும் தொடங்கி, அதில் பட்ஜெட் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன்மூலம், பட்ஜெட் கூட்டத்தொடரில் ஆளுநரின் தொடக்க உரையை மாநில அரசு புறக்கணிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More