Mnadu News

பைனாகுலரில் கூட பார்க்க முடியாது: காங்கிரஸ் தோல்வி குறித்து அமித்ஷா பேச்சு.

வடகிழக்கு மாநிலங்களில், பைனாகுலரில் வைத்து பார்த்தாலும் பார்க்க முடியாத அளவிற்கு காங்கிரஸ் தோல்வி அடைந்துவிட்டது என மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அமித்ஷா கூறியுள்ளார்.கர்நாடக மாநிலம் பிடார் பகுதியில் நடந்த கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: மேகாலயா, நாகாலாந்து, திரிபுரா மாநிலங்களில் காங்கிரஸ் துடைத்து எறியப்பட்டுள்ளது. அங்கு பைனாகுலரை வைத்தும் அவர்களை தேட முடியாது.வடகிழக்கு மாநிலங்களில் பா.ஜ., நுழைய முடியாது எனக்கூறினர். ஆனால், அங்கு தொடர்ந்து இரண்டாவது முறையாக பா.ஜ., ஆட்சி அமைப்பதுடன், தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.வடகிழக்கு மாநிலங்கள், குஜராத், உ.பி., அல்லது கர்நாடகா ஆகட்டும், பிரதமர் மோடியின் மேஜிக் அங்கு வேலை செய்கிறது. ராகுல் தலைமையில் காங்கிரஸ் வீழ்த்தி அடைந்து வருகிறது. இதனால், அவர்களும், ஆம் ஆத்மியும் மோடிக்கு எதிராக கோஷம் போட்டு வருகின்றனர். மோடி நீண்ட காலம் வாழ வேண்டும் என மக்கள் பிரார்த்தனை செய்து வருவதால், கடவுள் உங்களின் கோஷங்களை கேட்க மாட்டார். என்று அமித்ஷா பேசினார்.

Share this post with your friends

இந்தியாவுக்கேவழிகாட்டியாகஅமைந்ததுவைக்கம் போராட்டம்:முதல்அமைச்சர் எழுச்சி உரை.

இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்தது வைக்கம் போராட்டம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி உள்ளார்....

Read More

கர்ப்பிணிகள்வடகொரியாவில்தூக்கிலிடப்படுகிறார் கள்:தென்கொரியா குற்றச்சாட்டு.

தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,ஆறு மாத கர்ப்பிணி பெண்ணை வட...

Read More