Mnadu News

பொங்கல் பண்டிகை: ஜன.13-ம் தேதி பயணம் செய்ய முன்பதிவு துவக்கம்.

பொங்கல் பண்டிகை 2023 ஜனவரி மாதம் 15 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை கொண்டாட பெரும்பாலான மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். இந்நிலையில் சொந்த ஊர்களுக்கு செல்பவர்களுக்கு ரயில் முன்பதிவு குறித்த தகவலை தெற்கு ரயில்வே அறிவித்தது.அதையடுத்து அரசு விரைவு பேருந்துகளில் 300 கி.மீ தூரத்திற்கு மேல் செல்லக்கூடிய அரசு பேருந்துகளுக்கு 30 நாள்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யும் வசதி நடைமுறையில் உள்ளது.
அந்த வகையில் ஜனவரி மாதம் 12-ஆம் தேதி பயணம் செய்வதற்கு நேற்று முன்பதிவு ஆரம்பமானது. இந்நிலையில் 13 ஆம் தேதி பயணம் செய்ய இன்று முதல் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கலுக்கு 2 நாள்களுக்கு முன்னதாக சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவோர் அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More