Mnadu News

பொற்கோயில் தொடர் குண்டுவெடிப்பில் 5 பேர் கைது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் அருகே கடந்த மே 6 மற்றும் 8-ஆம் தேதிகளில் பயங்கர சப்தத்துடன் குறைந்த சக்திவாய்ந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.இந்நிலையில்,அதே பகுதியில் மீண்டும் குண்டு வெடிப்பு நடந்தது.அதையடுத்து,சந்தேகத்தின்பேரில் பொற்கோயில் அருகே ஒரு பெண் உள்பட மூன்று பேரை காவல்துறையினர் விசாரித்தனர்.தொடர்ந்து, குண்டுவெடிப்பு நடந்த பகுதிகளில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வும் நடத்தப்பட்டது. இந்நிலையில், குண்டுவெடிப்பு வழக்கில் 5 பேரைக் கைது செய்துள்ளதாக பஞ்சாப் மாநிலம் காவல்துறைத் தலைவர் கௌரவ் யாதவ் தெரிவித்துள்ளார்.

Share this post with your friends