Mnadu News

மகேந்திரகிரியில் கிரையோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி.

நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள மகேந்திரகிரியில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் திரவ எரிபொருள் திட்ட வளாகம் செயல்பட்டு வருகிறது. இங்கு விண்ணில் செலுத்துவதற்கு தேவையான கிரையோஜெனிக் என்ஜின் தயார் செய்யப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் எல்விஎம்3 ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் என்ஜின் பரிசோதனை மகேந்திரகிரியில் அமைந்துள்ள இஸ்ரோ மையத்தில் நேற்று வெற்றிகரமாக நடந்தது. இங்கு எல்விஎம்3-எம்3 திட்டத்திற்காக பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் என்ஜின் சீஇ-20 சோதனை செய்யப்பட்டது. இந்த சோதனை 25 விநாடிகள் நீடித்தது. இது வெற்றிகரமாக நடந்தது என்று இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்படடுள்ளது.

Share this post with your friends