Mnadu News

மணீஷ் சிசோடியாவுக்கு மார்ச் 20 வரை காவல் நீட்டிப்பு: ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவு.

டெல்லி கலால் கொள்கையை உருவாக்கி அமல்படுத்தியதில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பாக தில்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்தது.இதன் தொடர்ச்சியாக மணீஷ் சிசோடியா, கடந்த 27-ம் தேதி தில்லி சிபிஐ ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.மணீஷ் சிசோடியாவிடம் கூடுதல் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று சிபிஐ கோரிய நிலையில், அதனை ஏற்றுக்கொண்டு மணீஷ் சிசோடியாவை 7 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டது.தற்போது சிபிஐ காவல் நிறைவடைந்த நிலையில் இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்படடார். இந்நிலையில் மணீஷ் சிசோடியாவின் காவல் மேலும் மார்ச் 20 வரை நீடித்து சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share this post with your friends

துரோகத்தை பற்றி செந்தில் பாலாஜி பேசக்கூடாது: எடப்பாடி பழனிசாமி தாக்கு.

சட்டசபை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மின்சாரத்துறை அமைச்சர்...

Read More