Mnadu News

மதங்களைப் பற்றி பேசக்கூடிய தேர்தல் அல்ல இது: சச்சின் பைலட் பேச்சு.

சென்னையில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் நடத்தும் இரண்டு நாள் கல்விச் சிந்தனை அரங்கு நடைபெற்று வருகின்றது.முதல் நாள் நிகழ்வில் கலந்து கொண்டு சச்சின் பைலட் பேசியதாவது:நாடாளுமன்றத்திற்கு நான் முதன்முதலில் சென்றபோது, வேறு மாதிரியான மக்கள் அங்கிருந்தனர். விவாதங்கள் நடைபெற்றன. அதெல்லாம் தற்போது மாறிவிட்டது. எல்லா மாற்றங்களும் எதிர்மறையானவை என்று சொல்ல முடியாது. ஆனால், அனைத்தும் நேர்மறையானது அல்ல.அரசியல் என்பது 24 மணிநேர வேலையில்லை என்று நினைப்பது தவறானது. நேரம், அர்ப்பணிப்பு மற்றும் இருப்பு ஆகியவை 24 மணிநேரமும் இருக்க வேண்டும்.நீங்கள் சொல்லும் அனைத்து நல்ல விஷயங்களையும் உங்கள் குழந்தைகள் கேட்பார்கள். ஆனால், அவர்கள் பார்ப்பதைதான் பின்பற்றுவார்கள்.நூற்றாண்டுகளுக்கு முன்பு உயிரிழந்தவர்களைப் பற்றி பேசுவதற்கு நாம் அதிக நேரத்தை செலவிடுகிறோம். சுகாதாரம், கல்வி, வேலை குறித்து நாம் பேச வேண்டும். எதிர்காலத்திற்கு நாம் கவனம் செலுத்த வேண்டும்.ராஜஸ்தானின் உள்ளாட்சித் தேர்தலில் 40 வயதுக்குள்பட்ட இளைஞர்களை வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினேன். அவர்களிடம்தான் ஆற்றல் உள்ளது.

2024 தேர்தல் முக்கியமான ஒன்று. இந்த தேர்தலில் கோயில், மசூதி, தேவாலயம், ஹிந்து, முஸ்லீம் என்று பேசாமல் உண்மையான மக்கள் பிரச்னையை பேச வேண்டும். நாட்டின் வளர்ச்சி குறித்து விவாதிக்க வேண்டும்.தேசிய ஜனநாயக கூட்டணியை வீழ்த்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும். பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் தலைமையிலான அணியால் மட்டுமே முடியும் என்றார்.

Share this post with your friends

இந்தியாவுக்கேவழிகாட்டியாகஅமைந்ததுவைக்கம் போராட்டம்:முதல்அமைச்சர் எழுச்சி உரை.

இந்தியாவுக்கே வழிகாட்டியாக அமைந்தது வைக்கம் போராட்டம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றி உள்ளார்....

Read More

கர்ப்பிணிகள்வடகொரியாவில்தூக்கிலிடப்படுகிறார் கள்:தென்கொரியா குற்றச்சாட்டு.

தென்கொரிய ஒருங்கிணைப்பு அமைச்சகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில்,ஆறு மாத கர்ப்பிணி பெண்ணை வட...

Read More