சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “2015-16-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் மத்திய அரசு எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக அறிவித்தது. 2018-ல் மதுரையில் 750 படுக்கை வசதிகளுடன் கூடிய எய்ம்ஸ் மருத்துவமனை 45 மாதங்களில் கட்டி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அத்துடன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.பிறகு சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டது. இந்த நிலையில், தமிழகத்தின் மருத்துவ கட்டமைப்பிற்கு ஜப்பான் பயணத்தின்போது நிதி கோரப்பட்டது.மதுரை எய்ம்ஸ்க்கும் நிதி வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதற்கு விளக்கமளித்த ஜெய்க்கா அமைப்பு, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டமைப்புக்கு ஏப்ரலில் தான் டெண்டர் பணி நடைபெறும். 2024 இறுதியில் தான் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் துவங்கும். 2028-ல் தான் எய்ம்ஸ் பணிகள் முடிவடையும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளது” என்று அமைச்சர் கூறினார்.

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் போலீசார் இணைந்து நடவடிக்கை.
ஜம்மு காஷ்மீரில் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு...
Read More