Mnadu News

மனநல ஆலோசனை பெற தொலைபேசி எண்: அமைச்சர் அறிவிப்பு.

சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் “நட்புடன் உங்களோடு மனநல சேவை” என்ற தொலைபேசி வழி மனநல சேவை திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ,தொலைதூர மனநல ஆலோசனை மையம் 2 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டு உள்ளது. மனநல ஆலோசனை பெற 14416 என்ற புதிய எண் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த எண்ணில் தொடர்புகொண்டு பேசுபவர்களுக்கு, மனநலம் ஆற்றுபடுத்தும் சேவைகள், மனநல ஆலோசர்களுடன் விடியோ ஆலோசனைகள், தொடர் சிகிச்சைக்கான வழிகாட்டுமுறைகள் வழங்கப்படும்.
ஏற்கனவே 104 சேவை தமிழகத்தில் சிறப்பாக செயல்பட்டு கொண்டுருக்கிறது.
“நட்புடன் உங்களோடு மனநல சேவை” என்ற திட்டத்தில் 2 மனநல மருத்துவர்கள், 4 உளவியலாளர்கள், 20 ஆற்றுபடுத்துனர்கள் மனநல ஆலோசனைகளை வழங்க இருக்கிறார்கள் என்று கூறி உள்ளார்.

Share this post with your friends

காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் போலீசார் இணைந்து நடவடிக்கை.

ஜம்மு காஷ்மீரில் செக்டார் எல்லைப் பகுதியில் அத்துமீறி நுழைய முயன்ற பயங்கரவாதியை பாதுகாப்பு...

Read More

கர்நாடக மாநிலத்தின் வளர்ச்சிக்கு நிலையான பாஜக அரசு தேவை: பிரதமர் மோடி பேச்சு.

கர்நாடகாவில் தாவணகெரேவில் பேசிய பிரதமர்,சந்தர்ப்பவாத, சுயநல அரசுகள் நீண்ட காலமாக இருந்தது கர்நாடக...

Read More