Mnadu News

மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவு தர வேண்டும்:முதலமைச்சா வேண்டுகோள்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மல்யுத்த வீரர்,வீராங்கனைகளை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். அதைத் தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ்காரர்களாக இருந்தாலும் சரி, ஆம் ஆத்மி கட்சிகாராக இருந்தாலும் சரி,அல்லது பாஜகவைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி,இல்லை,எந்தக் கட்சியையும் சாராதவராக இருந்தாலும் சரி, நம் நாட்டை நேசிக்கும் அனைவரும் இந்த மல்யுத்த வீரர்களுக்குஆதரவு அளிக்க இங்கு வர வேண்டும். ஏனெனில் இவர்கள் அனைவரும் நம் நாட்டு விளையாட்டு வீரர்கள் ஆவார்கள். எனவே, அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும்,தண்ணீர்,மின்சாரம் உள்ளிட்ட பிற அடிப்படை வசதிகளை துண்டிக்க வேண்டாம் என்று மத்திய அரசை கேட்டுக்கொள்கிறேன் என்று பேசியுள்ளார்.

Share this post with your friends

ரயில்வே சிக்னல்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு ரயில்வே துறை கடிதம்.

அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் எழுதி உள்ள கடிதத்தில், ரயில்வே சிக்னல்...

Read More