பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் கலை கூடத்தில் இருந்து வந்தவர் இயக்குநர் அட்லீ. ஆரம்பமே சிக்சர் என்பது போல அவர் இயக்கிய ராஜா ராணி படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது.

இதன் பிறகு இவரின் மாபெரும் இன்னிங்ஸ் ஸ்டார்ட் ஆனது. தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று பிளாக் பஸ்டர் வெற்றி படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் பட்டியலில் தனி இடத்தை பிடித்தார்.

ஆனால், இயக்குநர் ஏ ஆர் முருகதாசை தொடர்ந்து இயக்குநர் அட்லீ மீது கதை திருட்டு புகார் எல்லா படங்களுமே எழுந்து வந்துள்ளன. ஆனால், கொடுக்க வேண்டியதை கொடுத்து தயாரிப்பு தரப்பு அதை சரி செய்து விடும். இது அவரின் நான்கு படங்களுக்கும் நடந்துள்ளன.

ராஜா ராணி வந்த போது மௌன ராகம் கதை என்றார்கள், தெறி வந்த போது சத்ரியன் கதை என்றார்கள், மெர்சல் வந்த போது அபூர்வ சகோதரர்கள் கதை என்றார்கள், பிகில் வந்த போது படத்தை சொதப்பி வைத்துள்ளார் என்றார்கள்.

தற்போது ஹிந்தி சூப்பர் ஸ்டார் ஷாரூக் கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் கதை விஜயகாந்த் நடித்த “பேரரசு” படத்தின் கதை என தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சமூக வலைதளங்களில் அட்லீயை நெட்டிசன்கள் வறுத்து எடுத்து வருகின்றனர்.
