சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என குற்றம்சாட்டி, தமிழ்நாடு பாஜக செயலாளர் சீனிவாசன் என்பவர் தேசிய பட்டியலினத்தவர், பழங்குடியினர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து விளக்கம் கேட்டு அனுப்பப்பட்ட நோட்டீஸ்களை ரத்து செய்யக் கோரி முரசொலி அறக்கட்டளை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.இந்நிலையில் வழக்கு நீதிபதி அனிதாசுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆணையத்தின் சார்பில் பதில்மனு தாக்கல் செய்தது. அதில், பஞ்சமி நில விவகாரம், பட்டியலின நலன் சம்பந்தப்பட்டது. எனவே, ஆணையம், விதிகளின்படி விசாரணை மட்டுமே நடத்தியுள்ளது. ஆனால் எந்த முடிவும் எடுக்கவில்லை. பட்டியலின மக்களின் நலன்களை பாதுகாக்க, உரிமையியல் நீதிமன்றத்தின் அதிகாரத்தைப் பெற்ற அரசியல் சாசன அமைப்பான ஆணையம் விசாரணை நடத்திய நிலையில் இந்த வழக்கு தொடரப்பட்டது. எனவே, நீதிமன்றம் தகுந்த உத்தரவை பிறப்பிக்கலாம்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி இரு தரப்பு வாதங்களுக்காக வழக்கின் விசாரணையை ஜூலை 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More