Mnadu News

முல்லைப் பெரியாறு அணை: தமிழகத்திற்கு நீர் வெளியேற்றம் அதிகரிப்பு.

முல்லைப் பெரியாறு அணையின்; நீர்மட்டம் 141.40 அடி உயரமாக உள்ளது, (மொத்த உயரம் 152 அடி), அணையில் நீர் இருப்பு 7,504 மில்லியன் கன அடியாகவும், அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 2,105 கன அடியாகவும் இருந்தது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் விநாடிக்கு 1,100 கன அடியாக வெளியேற்றப்பட்டது.
கடந்த நவ.4 முதல் அணையிலிருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் விநாடிக்கு, 511 கனஅடியாக திறந்து விடப்பட்டிருந்தது. அதன் பின்னர், 42ஆவது நாளான வியாழக்கிழமை தண்ணீர் திறப்பு அதிகரித்து, விநாடிக்கு 1,100 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் விநாடிக்கு கடந்த 41 நாள்களாக விநாடிக்கு 511 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில், தேனி மாவட்டம் லோயர்கேம்ப்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் ஒரு மின்னாக்கி மூலம் 42 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. தற்போது தண்ணீர் அதிகமாக வெளியேற்றப்பட்டதால் அதன் மூலம் 3 மின்னாக்கிகளில் தலா 35,34,30 என மொத்தம் 99 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி தொடங்கியது.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More