முல்லைப் பெரியாறு அணையில் புதன்கிழமை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 141 அடியை எட்டியது. நீர்பிடிப்பு பகுதிகளான பெரியாறு அணையில் 3.6 மில்லி மீட்டர் மழையும், தேக்கடி ஏரியில் 2.8 மி.மீ., மழையும் பெய்தது. அணைக்குள் நீர் வரத்து விநாடிக்கு 1,166.25 கன அடியாகவும், அணையிலிருந்து தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் விநாடிக்கு 511 கன அடியாகவும் இருந்தது. அணையில் நீர் இருப்பு 7,396 மில்லியன் கன அடியாக இருந்தது.
ஏற்கனவே கடந்த டிச.3-ல் அணையின் நீர்மட்டம் 140 அடியை எட்டியதால் முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. தற்போது 141 அடியை எட்டியதால் இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதை அணையின் நீர் வள ஆதாரத்துறை தேக்கடி பிரிவு உதவி பொறியாளர் பி.ராஜகோபால் அறிவித்தார்.

திரையில் வென்றதா சென்ற வாரம் வெளியான படங்கள்! நிலவரம் என்ன ?
காலம் காலமாக ஒவ்வொரு வாரம் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பல படங்கள்...
Read More