Mnadu News

முஸ்லிம்களின் 4 சதவிதம் இடஒதுக்கீடு ரத்து: இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு.

கர்நாடகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு அளிக்கப்பட்டு வந்த 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்து, முதல் அமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக அரசு கடந்த மார்ச் 24-இல் ஆணை பிறப்பித்தது. இந்நிலையில், முஸ்லிம்களின் 4 சதவீத இடஒதுக்கீடு ரத்துக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், முஸ்லிம்களின் 4 சதவீத இடஒதுக்கீடு வழக்கில் அடுத்தக்கட்ட விசாரணையை மே 9-ஆம் தேதி வரை ஒத்திவைப்பதாகவும், அதுவரை இடஒதுக்கீடு ரத்துக்கு இடைக்கால தடை விதிப்பதாக உத்தரவிட்டனர்.அதையடுத்து,மே 9-ஆம் தேதி வரை 4 சதவிகிதம் இடஒதுக்கீடு அடிப்படையில் எந்த நியமனமும், சேர்க்கையும் நடைபெறாது என்று கர்நாடக அரசு உறுதி அளித்துள்ளது.

Share this post with your friends

ரயில்வே சிக்னல்கள் செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு ரயில்வே துறை கடிதம்.

அனைத்து மண்டல மேலாளர்களுக்கும் ரயில்வே வாரியம் எழுதி உள்ள கடிதத்தில், ரயில்வே சிக்னல்...

Read More