Mnadu News

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து சரிவு.

காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்தது. மழை குறைந்ததால் கர்நாடக அணைகளிலிருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவும் வெகுவாக குறைக்கப்பட்டது. இதனால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு இன்று காலை வினாடிக்கு 15 ஆயிரத்து 500 கன அடியாகவும் சரிந்து உள்ளது.
நீர் வரத்து சரிந்ததால் காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 17 ஆயிரம் கனஅடியிலிருந்து வினாடிக்கு 15 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணையின் நீர் இருப்பு 93 புள்ளி 47 டி.எம்.சியாக உள்ளது.

Share this post with your friends