பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்குமாறு நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றிருந்த நதிகள் இணைப்பு என்ற வாக்குறுதியை ரஜினிகாந்த் பாராட்டி இருந்தார். அதேபோல் மக்களவைத் தேர்தலில் பாஜக மீண்டும் வெற்றி பெற்றதற்காக நரேந்திரமோடிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து கூறி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.இந்நிலையில் வரும் 30ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில், பிரதமராக மோடி பதவியேற்க உள்ள நிலையில் விழாவில் பங்கேற்குமாறு ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருவண்ணாமலையில் மண்சரிவு: ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
திருவண்ணாமலை மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி...
Read More