Mnadu News

யுபிஐ பரிவர்த்தனை 730 கோடியாக அதிகரிப்பு.

இந்திய தேசிய பேமண்ட்ஸ் கார்ப்பரேஷன் தரவுகளின்படி, கடந்த அக்டோபர் மாதத்தில் 12 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான 730 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது கடந்த செப்டம்பர் மாதத்தைக் காட்டிலும் 7 புள்ளி 7 சதவீதம் அதிகரித்துள்ளதைக் காட்டுகிறது.
இதுதவிர, கடந்த அக்டோபர் மாதம் ஐஎம்பிஎஸ் சேவை மூலம் வங்கிகள் இடையிலான உடனடி பரிவர்த்தனைகள் 48 கோடியே 25 லட்சமாக இருந்தது. பரிவர்த்தனை செய்யப்பட்ட தொகை 4 லட்சத்து 66 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். அதோடு, ஃபாஸ்ட்டேக் மூலம் செய்யப்படும் சுங்கக் கட்டண வசூல் அக்டோபர் மாதத்தில் 4 ஆயிரத்து 451 கோடியே 87 லட்சமாக அதிகரித்துள்ளது.

Share this post with your friends

விரைவில் செல்வா இயக்கத்தில் உருவாகும் மல்டி ஸ்டார் படம்! யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா?

இயக்குனரும், நடிகருமான செல்வராகவன் இயக்கத்தில் அறிமுகமானவர் பன்முகத் திறமைசாலி நடிகர் தனுஷ். துள்ளுவதோ...

Read More