Mnadu News

ரஷ்ய எண்ணெய் சர்ச்சை: ஐரோப்பிய ஒன்றிய குற்றசாட்டுக்கு ஜெய்சங்கர் பதிலடி.

வங்கதேசம், ஸ்வீடன், பெல்ஜியம் நாடுகளுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்ட வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கடைசியாக பெல்ஜியம் வந்தடைந்தார். பெல்ஜியம் வந்த அவர் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் சில இந்தியாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு எதிராக குரல் கொடுத்தன.இந்நிலையில்,பெல்ஜியம் தலைநகர் ப்ரூசல்ஸில் பேசிய ஜெய்சங்கர், ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கை தலைவர் ஜோசப் போரெலுக்கு இதன் நிமித்தமாக ஒரு விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.அதில், “ஐரோப்பிய ஒன்றிய சட்ட திட்டங்களை ஆராய்ந்து பாருங்கள். அது, ரஷ்ய கச்சா எண்ணெய்யை மூன்றாவது நாட்டில் வேறு எண்ணெய்யாக சுத்திகரிக்கப்பட்டால் அது ரஷ்ய எண்ணெய் அல்ல என்று கூறுகிறது. கவுன்சில் சட்டதிட்டம் 833 – 2014-ல் இது குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, அவ்வாறாக மூன்றாம் நாட்டில் சுத்திகரிக்கப்படும் எண்ணெய் ரஷ்ய எண்ணெய்யாக எப்படி கருதப்படும்” என்று வினவினார். அதோடு;, ரஷ்யாவுடன் இந்தியா மேற்கொண்டுள்ள எண்ணெய் வர்த்தகம் மிக மிக சொற்பமானது. வெறும் 12 முதல் 13 பில்லியன் டாலர் அளவிலானதே என்றும் அவர் கூறியுள்ளார்.

Share this post with your friends

மதிமுக பொதுச் செயலாளராக வைகோ மீண்டும் தேர்வு:முதன்மைச் செயலாளர் ஆனார் துரை வைகோ.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஐந்தாவது அமைப்புத் தேர்தல் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,...

Read More

அலட்சியம் காரணமாகவே அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன: லாலு பிரசாத் யாதவ் விமர்சனம்.

பீகாரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ள ராஷ்ட்ரிய ஜனதா தளத் தலைவரும், முன்னாள் ரயில்வே...

Read More